தோஷம் உள்ள ஜாதகர்கள் என்னதான் காதலித்து இளவயதிலேயே திருமணம் செய்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை ஏதாவது ஒரு காரணத்தினால் இடையிலேயே முறிந்து விடலாம். இதன் காரணமாகவே ஜோதிடர்கள் 30 வயதிற்கு பின்னர் தோஷமுள்ள ஜாதகர்களுக்கு திருமணம் செய்ய பரிந்துரைக்கின்றனர். தோஷமுள்ள ஜாதகர், தோஷம் இல்லாத ஜாதகரை 30 வயதிற்கு முன்னர் காதலித்தால், அவர்களின் திருமணத்தை தோஷமுள்ளவரின் 30 வயதிற்கு பின்னர் நிகழ்த்துவது உகந்தது. தோஷம் உள்ள ஜாதகர்கள் தோஷம் இல்லாத ஜாதகர்களை 30 வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால், அவசியம் ஆணுறை அணிந்து உடலுறவு கொண்டு 30 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் திருமண வாழ்க்கையில் தடங்கல் ஏற்பட்டாலும் ஒரு குழந்தை தனித்து விடப்படமாட்டாது. தோஷம் இருந்தால் அதே தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்ய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் முக்கியமான தோஷங்கள் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? ஜாதகம் என்பது ஒருவரது பிறந்த நேரம், திகதி, இடத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் விண்மீன் நிலை வரைபடம். இதில், கிரகங்கள் எந்த ராசியில், எந்த பாவத்தில் இருக்கின்றன என்பதை வைத்து வாழ்க்கையில் ஏற்ப...
மாப்பிள்ளை இல்லாமல் திருமணமா? இது ஏதாவது லெஸ்பியன் திருமணமா இருக்கும்னு நினைக்காதீங்க. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை சில சாதியாரிடத்தில் மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரமுடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி மணப்பெண்ணுக்கு தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக் காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளை தடியை (Boomerang/வளரி) கொண்டு போய் அவனுடைய சகோதரி மணப் பெண்ணுக்குத் தாலிகட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலிகட்டும் வழக்கம் இருந்துள்ளது என்பதற்கு இவை சான்றுகளாகும். அந்தக் காலத்து ஆண்களின் கையில் பிடித்து பயன்படுத்திய வளரியை/வளை தடியை பார்த்து இருக்கிறீர்களா? அதில் அவனின் ஆண்மை அடையாளப்படுத்தப்படும். பார்ப்பதற்கு ஒரு ஆணின் ஆண்குறி போன்றே இருக்கும். தன் ஆண்குறியை உருவி, இன்பம் கண்ட அதே கையால், வீசி, வேட்டையாடி அவனது ஆண்மையை(Stamina) உணர வைத்த வளை தடியை விட சிறந்தது வேறு எதனை அவனை பிரதிபலிக்கும் வகையில் திருமண மேடை...