சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் திருமணம் ஆனவர்கள் அவசியம் படிக்கவும். விருப்பமும், தேவையும் உடையவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். மற்றவர்கள் கடந்து போங்கள்.
கலவி எனும் உடலுறவை பற்றி பலருக்கும் குறிப்பாக இன்றைய தலை முறையினர்க்கு சரியான புரிதல் இல்லை. இன்று ஒரு ஊரில் ஒரு தெருவுக்கு பத்து பேர் வரை திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதை காணலாம். அக்காலத்தில் ஒரு வீட்டுக்கு 5 குழந்தை முதல் 10 குழந்தை வரை சர்வ சாதாரணமாக பெற்றனர். ஆனால் இன்றோ ஒரு குழந்தையை பெறவே வழியின்றி கஷ்ட படுகின்றனர்.
இதற்கு பல காரணம் உண்டு இருப்பினும் முக்கியமான சில விஷயங்களை கடை பிடித்தால் குழந்தை பாக்கியம் எளிதில் வாய்க்கும்.
பெண்கள் கடைபிடிக்க வேண்டியது:
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக உடற்சூடு இல்லாமல் இருக்க வேண்டும்.
அதீத இனிப்பு வகைள் எடுக்க கூடாது.
அன்னாச்சி பழம் தவிர்க்க வேண்டும்.
கடுகை உணவில் எடுப்பதை தவிர்ப்பது நல்லது(கருவை சிதைக்கும் தன்மை உடையது).
கணவரோடு உடலுறவு கொள்ளும் போது மலம், சிறுநீரை வயிற்றில் அடக்கி கொண்டு ஈடுபட கூடாது.
கட்டிலை தவிர்த்து தரையை(உடலுறவின் போது) உபயோகிப்பது நலம்.(புவியின் காந்த சக்தி அந்த சமயத்தில் வியாப்பித்து இருப்பது சிறப்பு)
மனைவி உடலுறவு முடிந்த உடனே கழிவறைக்கு செல்ல கூடாது. சிறிது நேரம் கழித்து செல்லுதல் நலம்.
மாதவிடாய் காலங்களில் பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். இல்லையெனில் தொற்று ஏற்பட்டு அவை கருப்பை வர செல்ல கூடும்.
உடலுறவின் போது இருவரின் சுவாசம் வலது நாசியில் உள்ள போது ஈடுபட்டடால் கரு தாமதம் இன்றி உண்டாகும். இவை அனைத்தும் பெண்கள் பின்பற்ற வேண்டியது. ஆண்களுக்கு ஏதேனும் உடற்குறை இருந்தாலும் கருவுறுதல் தடைபடும்.
இதில் இன்னொரு விடயம் கவனித்தீர்களா? வலது நாசி சுவாசம் ஓடுவதை சாதாரணமாக கண்டுபிடித்து விட முடியாது. ஆனால் வள்ளலார் கூறியது போல் நாசியை தொடாமலே நாசியை மாற்றும் வித்தை, அதாவது இருபாலருமே வலது கை மேல் இருக்குமாறு ஒருக்களித்து படுத்தால் ஓரிரு நிமிடத்தில் வலது சுவாசம் நடைபெறும்.
முதலில் செக்ஸ்னா என்னனே பலருக்கு தெரியல. மூடு வந்தா குத்திட்டு கவுந்தடிச்சி படுத்துறதுனு நெனைக்குறாங்க. உண்மையில் உடலுறவு என்பது வெறுமனே பெண்குறியில் ஆண்குறியை நுழைத்து புணர்வதா?(18+)
காமம் இன்பமாவது எப்போது? முதலில் ஆண் பெண் இருவரும் ஒருவாரம் விரதம் இருந்து குளிர்ச்சியான நீரில் குளித்துவிட்டு வெறும் வயிற்றில் உறவில் ஈடுபட வேண்டும். எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை முயற்சி செய்வது நல்லது.
Read More: கருமுட்டை வெளியேறும் தினத்தை அறிந்து உடலுறவு கொள்வதன் மூலம் மனைவியை சீக்கிரம் கர்ப்பமாக்கலாம்.


