ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதே சமூகத்தினதும், உறவினர்களினதும் சம்மதத்துடன் ஒரு கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கையினுள் நுழைந்து தேவையான அளவு உடலுறவு கொள்வதாகும்.
திருமணத்தின் முக்கியமான நோக்கம் உடலுறவு என்பதால் நீங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ள உங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையுடன் உங்கள் அந்தரங்க விடையங்கள் தொடர்பில் நேரடியாகவோ அல்லது ஒழிவுமறைவாகவோ பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமே ஜாடிக்கு ஏற்ற மூடியைத்தான் நீங்கள் தெரிவு செய்து உள்ளீர்களா என்பதை அறிய முடியும்.
தவறான தெரிவுகள் உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யாமல் போகலாம். உங்கள் படுக்கை சுகத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆகவே பெண்களை விட ஆண்கள் இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இதைப்பற்றி பேச கூச்சப்படலாம்.
ஆனால் ஆண்களும் பதிலுக்கு வெட்கப்பட்டுக் கொண்டு தயங்கி நிற்காமல் தமது ஆண்மை, ஆண்மையின் ஆற்றல் தொடர்பிலும், தமது பாலியல் தேவைகள் தொடர்பிலும் தமது துணையிடம் குறைந்தது திருமணத்திற்கு முதலாவது தனிமையில் சந்தித்து பேச வேண்டும். முதலிரவில் அவுத்துக் காட்டும் போது, உங்கள் இல்லறவாழ்க்கை/தாம்பத்திய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்கான காலம் கழிந்து போயிருக்கும். அப்புறம் இருப்பதை வைத்து வாழ வேண்டிய நிலை தான் உங்களுக்கும்.
Read More: ஆணும் பெண்ணும் தமது அந்தரங்க உறுப்பு தொடர்பில் எப்படி தமது எதிர்கால துணையிடம் உரையாடுவது?

















