கோயில் பரிகாரங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், வாஸ்து பிரச்சனைகள் மற்றும் திருமண/புத்திர தடையை நீக்கி, வாழ்வில் சுபிட்சத்தை நிலைநாட்ட உதவுகின்றன. உதாரணமாக திருநள்ளாறு (சனி), திருப்பாம்புரம் (ராகு-கேது), திருவாலங்காடு (சிவன்) போன்ற தலங்களில் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்வது தோஷ நிவர்த்தி தரும் முக்கிய பரிகாரங்களாகும்.
இவ்வாறு பரிகாரங்களுக்கென குறிப்பிட்ட இந்து ஆலயங்கள் இருப்பது ஏன்? அந்த பரிகாரங்களை செய்ய வருபவர்கள் ஒரே தோஷமுடைய மணமகன், மணமகளை சந்திக்கக் கூடிய வாய்ப்பினை இது உருவாக்கக் கூடியதாக இருப்பதனால் ஆகும். ஒரே வகையான தோஷமுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தால் தோஷம் கழிந்து விடும் என்பது நம்பிக்கை.
அதற்காக கட்டாயம் இந்த ஆலயங்களில் மாத்திரம் தான் இவ்வாறான சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றில்லை. ஆறு, கடல், குளம், கேணி போன்ற நீர் நிலைகளை அண்டி உள்ள சிவன் கோயில்களில் கூட இந்த பரிகார பூஜைகளை செய்யலாம்.
இவ்வாறான பரிகார பூஜைகளை செய்வதற்கு ஆண்கள் தனிமையில் செல்வது சிறந்ததாகும். முதலில் கோயிலின் அருகில் உள்ள அந்த நீர் நிலைகளில் தலை முழுகி குளிக்க வேண்டும். அதற்கு முதலில் ஜட்டி முதல் அனைத்து ஆடைகளையும் கழட்டி, ஒரு வெள்ளை நிற துண்டை(கரை இல்லாத வேட்டி சால்வை) மாத்திரம் இடுப்பில் அணிந்து குளிக்க வேண்டும்.
இவ்வாறான நீர் நிலைகளில் குளிக்கும் போது சோப், ஷாம்பூ பயன்படுத்தக் கூடாது. உடலில் உள்ள அழுக்குகளை அருகில் இருக்கும் மண், மணல், அல்லது விபூதி பூசி தேய்த்து அகற்றி, குளிக்க வேண்டும்.
குளித்த பின்னர், உடலில் உள்ள ஈரம் காயும் வரை வெயிலில் இருக்க வேண்டும். அதன் போது கடவுள் பிரார்த்தனைகள், மந்திரங்களை ஓதலாம். உடலில் உள்ள ஈரம் காய்ந்த பின்னர், வேட்டி "மாத்திரம்" அணிந்து, வெறும் மேலுடன் கோயிலுக்குச் சென்று பரிகார பூஜை செய்வது சிறந்தது.
அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் ஆண்கள், அரைஞாண் கயிற்றின் உதவியுடன் கரையில்லாத வெள்ளை நிற வேட்டி(மாத்திரம்) அணிந்து, அருகில் உள்ள நீர் நிலையில் மூன்று முறை முக்கி எழுந்து, நெற்றி நிறைய விபூதி, மார்பில் சந்தணம் பூசி, குங்கும திலகமிட்டு அதனை செய்ய வேண்டும்.
உங்கள் இடுப்பில் அருணாக்கொடி உள்ளதா?
அங்கப்பிரதட்சணம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா இறைவனிடம் சரணடைவதைக் குறிக்கும் ஒரு பக்திச் செயலாகும். பக்தர்கள் கோவிலின் பிரகாரத்தில் தங்கள் உடல் முழுவதும் தரையில் படும்படி வலது பக்கமாக(வலதுபுறமாகச் சுற்றி வருதல்) கோயிலை சுற்றி உருண்டு வந்து இறைவனை வணங்குவர். இது பாவங்களைப் போக்கி, வேண்டுதல்களை நிறைவேற்றவும், மன உறுதி மற்றும் அடக்கத்தை வளர்க்கவும் செய்யப்படுகிறது.





