சித்திரை புத்தாண்டு தினத்தில், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை வேண்டி, தலையில் வைத்து நீராடப்படும் மூலிகை கலந்த புனித நீர் மருத்துநீர் ஆகும்.
தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். எனினும் மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விஷயம் ஆகும்.
மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுப்பதாகும்.
எனினும் நடைமுறையில் சில பிரதேசங்களில் இவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள், தமது வீடுகளுக்கு அருகில் கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள், பால் கலந்த சுத்த நீரில் மிளகு, சுக்கு இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும், பாதத்திலும் வைத்து நீராடுவது உசிதமாகும்.
உங்கள் வீடுகளுக்கு அண்மையில் உள்ள இந்துக் கோயில்களில் இதனை தயாரித்து கொடுப்பது வழமை.
வயது வந்த ஆண்கள் மருத்துநீர் வைத்து குளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில பாரம்பரிய பழக்கங்கள்
1. மருத்துநீரை உச்சந்தலையிலும், பாதத்திலும் வைக்க வேண்டும். மருத்து நீரை வைத்த பின்னர் தலையில் தண்ணீர் ஊற்ற முன்னர், ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியில் எடுத்திருக்க வேண்டும்.
2. மூடிய குளியலறையில் குளிப்பதாக இருந்தால், உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் மருத்துநீர் வைத்து குளிக்க வேண்டும். பொது இடங்களில் குளிப்பதாக இருந்தால், மெல்லிய வெள்ளை நிற துண்டை(வேட்டியின் சால்வை) இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கலாம்.
3. மருத்து நீர் வைத்த பின்னர், தலையில் நீரை ஊற்றி உடலை முழுமையாக நனைத்த பின்னர், இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிறை இழுத்து அறுத்து கழட்ட வேண்டும்.
குறிப்பு: உங்கள் இடுப்பில் இருப்பது வெள்ளி அருணாக்கொடியாக இருந்தால் அதனை உங்கள் இடுப்பைச் சுற்றி அணியப் பயன்படுத்திய கறுப்பு கயிறை மாற்றினால் போதும். கறுப்பு அல்லது வேறு நிறங்களில் உள்ள அருணாக்கொடியாக(கயிறு) இருந்தால், அவற்றை அறுத்து கழட்ட வேண்டும்.
வருடா வருடம் இதனை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாக இது திகழ்கிறது. நீண்ட நாட்களாக அருணாக்கொடியை அணிந்திருப்பதனால், பழுதடைந்திருக்கும் அதனால் இலகுவாக அதனை இழுத்து அறுக்கக் கூடியதாக இருக்கும்.
4. அவசியம் கறுப்பு நிற அருணாக்கயிறு தான் அணிய வேண்டும் என்றில்லை. புத்தாண்டுக்கான அதிஷ்ட நிறமாக ஜோதிடர்கள் பரிந்துரைத்த நிறங்களில் கூட அருணாக்கயிறு கட்டலாம். ஆனால் அதனை இடுப்பில் கட்டும் போது ஆண்களின் உடம்பில் வேறு துணி இருக்கக் கூடாது.
Tips: புத்தாடையை மாத்திரம் அல்ல, உள்ளாடையை கூட புத்தாண்டுக்கான அதிஷ்ட நிறத்தில் தெரிவு செய்து அணியலாம்.
5. மருத்துநீர் தப்பி முழுகும் போது Soap, Shampoo போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
6. தலையில் ஆல் இலையும் காலில் இலவம் இலையும் வைத்து சித்திரை புத்தாண்டு புண்ணியகாலத்தில் நீராடினால் நற்பலன்கள் கிடைக்கும். விசு(விஷு) புண்ணிய காலத்தில் மருத்து நீர் வைத்து ஸ்ஞானம் செய்ய வேண்டும்.
விஷு புண்ணிய காலம் (சித்திரை/ஐப்பசி மாதப்பிறப்பு) என்பது சூரியன் மேஷம் அல்லது துலாம் ராசியில் நுழையும், பகல்-இரவு சமமாக இருக்கும் புனிதமான நேரமாகும். இந்த நேரத்தில் புனித நீராடி, மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியை வழிபட, செல்வச் செழிப்பும், நல்வாழ்வும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இது விஷ்ணுபதி புண்ணிய காலமாக போற்றப்படுகிறது.
மருத்துநீரில் உள்ள தாழம்பூ வியர்வை நாற்றத்தை மறைப்பதுடன் சொறிநீக்கமுஞ் செய்யும். தாமரைப் பூவும் கிருமிநாசினியாகவும் வாசனையாகவும் செயல்படுகிறது. மாதுளம் பூ உடம்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். காயங்களில் இருந்து இரத்தம் வெளியேறாது கட்டுப்படுத்த வல்லது. கட்டிகள் இருப்பினும் அவற்றை பழுக்க செய்யும். கண் சிவந்திருத்தல் கண்ணெரிவு முதலானவை குணமுறும்.
துளசி பீனிசம், இருமல்,தொண்டை கடுப்பு முதலியவற்றைக் குணமாக்கும். காயத்துள் கிருமிகள் அடைந்து புண்ணாவது தடுக்க உதவும்.இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியுண்டு. விஷ்ணுகிராந்தி காய்ச்சல், உடல்சூடு முதலியவற்றை மாற்றும். இருமல் நீக்கி, சவரத்தால் ஏற்பட்ட காயத்திற்கு சிறந்த நிவாரணி, செங்கழுநீர் காயமாற்றம் செய்யும்.
வில்வம் இதனுள் அமைந்த டானிக் அமிலம் சருமத்திற்கு நிறத்தையும் அழகையும் தரும். கண் சிவந்ததால் குணமாக்குவதுடன் பார்வை மங்காது பாதுகாக்கும். அறுகம்புல் கண்ணோய், தலைவலி, தலையிடி முதலியவற்றில் இருந்து விடுதலை தரும். கோசலம், கோமயம், கோரோசனை ஆகியன கிருமிநாசினிகள் சுவாச மேல் உறுப்புக்களை தாக்கும். வைரசுகள் பற்றீரியாக்களை கொல்லும் தன்மையுடையன. மஞ்சள், மிளகு, திப்பிலி ஆகியன கிருமிநாசினிகளாவது மட்டுமின்றி சருமத்தை, காதுகளை, சுவாச உறுப்புக்களை காக்க உதவுகின்றன.
இதனை அம்மா அப்பா குரு பெரியவர்களின் ஆசியோடு அவர்களின் கையினால் தலையில் தேய்த்து பின்னர் நீராடுவது காலச்சிறந்தது.
Keywords: புத்தாண்டுக்கு அரைஞாண் கயிறு அறுக்கும் வழக்கம், சித்திரை புத்தாண்டு




