முஸ்லும் ஆண்களே பூப்படையும் முன்னர் தமது ஆண்குறியின் முன் தோலை நீக்குவர் என்ற கருத்து நமது சமூகத்தில் நிலவினாலும், இந்து மதத்தை சேர்ந்த ஆண்களும் சுன்னத் செய்து தமது ஆண்குறியின் முன் தோலை நீக்குவர்.
இது ஒரு பொதுவான நடைமுறையாக இந்து ஆண்களால் பின்பற்றப்படாவிட்டாலும், தமிழர்களில் பிறமலைக் கள்ளர் இனத்தை சேர்ந்த ஆண்களுக்கு சிறுவயதிலேயே, வயதுக்கு வரும் ஆண்களுக்கான சடங்காக, காது குத்துவது போல அவர்களின் ஆண்குறியின் முன் தோலும் வெட்டப்படுகிறது. இதனை மதயானைக் கூட்டம்(2013) திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
Read More: ஆண்கள் சுன்னத் செய்வது கட்டாயமா?
வயதுக்கு வந்த பின்னரும் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாத இந்து ஆண்களும், கிறிஸ்தவ ஆண்களும் கூட சுன்னத் செய்து, தமது ஆண்குறியின் முன் தோலை நீக்குவது உண்டு.
Read More: உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியுமா?
என்ன தான் வயதுக்கு வந்த ஆண்களால் அவர்களின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருந்தாலும்,
எல்லா ஆண்களாலும் அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைத்திருக்க முடியாது. அதற்குக் காரணம் ஆண்களின் ஆண்குறியின் மொட்டு அதிக உணர்ச்சி மிக்கதாக இருப்பதும், ஆண்குறியின் முன் தோலானது அதன் மொட்டுடன் ஒரு தசை இணைப்பு(Frenulum) மூலம் இணைக்கப்பட்டிருப்பதனால் ஆகும். ஆனால் ஒரு ஆண் தனது ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைத்து பழக்க ஆரம்பித்து விட்டால், அது அதற்கு இயல்படைய தொடங்கி விடும்.
முஸ்லிம் ஆண்கள், அல்லது சுன்னத் செய்து கொண்ட ஆண்கள் இந்த நடைமுறைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். அவர்களும் சுன்னத் செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்கிய ஆரம்பத்தில் ஆண்குறியின் மொட்டின் உணர்ச்சி(Sensitivity) அவர்களுக்கு நரக வேதனையை கொடுக்கும். இருப்பினும் அவர்களின் ஆண்குறியின் மொட்டு சில நாட்களிலேயே உலர ஆரம்பித்து, வெளியே தங்க ஆரம்பித்து விடும்.
இயற்கையிலேயே முன் தோல் அல்லாத, அல்லது முன் தோலின் நீளம் குறைவான ஆண்களின் ஆண்குறியின் மொட்டு, பூப்படையும் காலம் முதலே வெளியே தங்க பழகி விடும். உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை எவ்வளவு நேரம் வெளியே தங்க வைத்திருக்க முடியும்?
உங்களுக்குத் தெரியுமா? வயதுக்கு வந்த ஆண்கள் குளிக்கும் போதும், ஒன்னுக்கு போகும் போதும்(சிறுநீர் கழிக்கும் போதும்) ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஆண்குறியின் மொட்டில் அடிக்கடி சிராய்வுகள், அலர்ஜிகள், சொரி சிரங்கு போன்ற புண்கள்(Balanitis நிலைமை) ஏற்படும் ஆண்கள், ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருப்பதன் மூலம், அல்லது சுன்னத் செய்து முன் தோலை நீக்குவதன் மூலம் அதற்கு நிரந்தமான தீர்வை பெறலாம்.
குறிப்பு: ஆண்குறியின் மொட்டை வெளியே வைத்திருக்க பழக்கும் ஆண்கள், ஆண்குறியின் மொட்டின் மேலே புதிதாக ஒரு தோல் படை(Skin Layer) உருவாவதை அவதானிக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் அல்லது அசெளகரியத்தால், மீண்டும் ஆண்குறியின் மொட்டை முன் தோலால்(Foreskin) மூடினால் அந்த தோல் படை கழறுவதையும் அவதானிப்பார்கள்.
முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைக்க பழக்கும் ஆண்களுக்கு சில நாட்களுக்கு இறுக்கமான ஆடைகள், ஜட்டிகள் அணிய முடியாத நிலை ஏற்படும். அப்படி அணிந்தால் அசெளகரியமாக இருக்கும். ஆனால் ஆண்குறியின் மொட்டு வெளியே இருக்க பழகியவுடன் அவர்களால் தாரளாகா தமது அன்றாட வாழ்க்கைக்குள் திரும்ப முடியும். வழக்கம் போல ஆடைகள், உள்ளாடைகளை அணியக் கூடியதாக இருக்கும்.
ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைக்க முயற்சிக்கும் ஆண்கள் வீட்டில் இருக்கும் போது, அல்லது இரவு நேர ஆடையாக லுங்கி, சாரம், வேட்டியை பயன்படுத்தலாம். அது அவர்களை அந்த நேரத்தில் செளகரியமாக உணர வைக்கும்.
சில நேரங்களில் ஆண்களுக்கு தானாகவே/இயற்கையாகவே/தன்னிச்சையாகவே ஆண்குறியின் மொட்டு, முன் தோல் பின்னால் நகர்த்தப்பட்டு வெளியே வந்திருப்பது உண்டு. அவ்வாறு நடந்தால், நீங்கள் அசெளகரியமாக உணரும் வரை அதனை வெளியவே இருக்க அனுமதிப்பது உகந்தது.











